தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அவர்களை மரியாதை நிமித்தமாக மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவர்கள் நேற்று சந்தித்து உரையாடினார்.

இந்த சந்திப்பின் போது மாநிலத்தின் தற்போதைய சமூக நலன், மக்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள், மற்றும் பொதுநல சேவைகள் குறித்த பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அருணாதேவி ரமேஷ்பாண்டியன் அவர்கள், ஜான் பாண்டியன் அவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுகிறார் எனவும், சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடும் தலைவரை நேரில் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.