தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நிகிலேசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை, மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மக்களின் சிரமத்தை நேரடியாக புரிந்து கொள்ளும் நோக்கில், மேயர் அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று மழைநீர் வெளியேற்றப் பணிகள் நடைபெறும் தெருக்களைத் தாண்டி ஆய்வு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவருடன் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் ஜான் சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து பங்கேற்றனர்.

பணிகள் விரைவாகவும் முழுமையாகவும் நிறைவேற அதிகாரிகளுக்கு மேயர் ஆலோசனைகள் வழங்கினார்.