தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தண்ணீர் தேங்காத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் ஸ்டேட் பேங்க் காலனி முதல் மேட்டுப்பட்டி வரை உள்ள வடிகால்களின் வழியாக மழைநீர் வெளியேறும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பகுதி மக்களிடம் மழைநீர் வெளியேற்றம் குறித்த நிலையை நேரில் அறிந்த மேயர், உடனடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நள்ளிரவில் மழைநீர் வெளியேற்ற பணிகளை மேயர் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை நீரில் நடந்து சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ – பூப்பாண்டிபுரம் முழுவதும் நீர் வெளியேற்றம் விரைவில்!
அடுத்த
தூத்துக்குடியில் கிழக்கு மண்டல அலுவலக முகாம் – மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026