தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தண்ணீர் தேங்காத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் ஸ்டேட் பேங்க் காலனி முதல் மேட்டுப்பட்டி வரை உள்ள வடிகால்களின் வழியாக மழைநீர் வெளியேறும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகுதி மக்களிடம் மழைநீர் வெளியேற்றம் குறித்த நிலையை நேரில் அறிந்த மேயர், உடனடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.