தூத்துக்குடி சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிய இந்த மக்கள் நலத் திட்டத்தின் கீழ், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாயர்புரத்தில் இம்முகாம் இன்று நடைபெற்றது.

இந்த முகாமை திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஊர்வசி எஸ். அமிர்தராஜ் MLA தொடங்கி வைத்து, மருத்துவ குழுவினரின் பணிகளை பார்வையிட்டார்.

முகாமில் பல்வேறு பிரிவுகளின் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, கண் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டு இலவச மருந்துகள் வழங்கினர். மேலும் சுகாதார விழிப்புணர்வு குறித்தும் மக்களிடம் ஆலோசனை வழங்கப்பட்டது.

நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமின் மூலம் பயனடைந்தனர். இதனை சிறப்பாக ஏற்பாடு செய்த மருத்துவ குழுவுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் MLA ஊர்வசி அமிர்தராஜ் பாராட்டுத் தெரிவித்தார்.