தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை, மாநகராட்சியின் 16ஆம் வார்டு கதிர்வேல் நகர் பகுதியில் நீர் தேங்கி பொதுமக்கள் கடும் அசௌகரியத்தில் தவித்தனர்.

மக்களிடமிருந்து தகவல் கிடைக்கும்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையைக் கண்காணித்தார். மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேங்கிய நீரை விரைவாக வெளியேற்றும் நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டார்.

இதன்படி, தீயணைப்புத் துறை வாகனங்கள் கதிர்வேல் நகர் பகுதிக்கு அழைக்கப்பட்டு, பம்ப் செட் மூலம் மழைநீர் வெளியேற்ற பணிகளைத் தொடங்கினர். அமைச்சர் நேரடி தலையீட்டால், அந்த பகுதியில் நீர் வேகமாக வெளியேறி, மக்களிடையே நிம்மதி நிலவுகிறது.

இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ மற்றும் பலர் உடனிருந்தனர்.