தூத்துக்குடி மாநகராட்சி 47 வது வார்டின் வயன்ஸ் டவுன் பகுதியில் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டிருந்த பட்டாக்களை ரத்து செய்ய, மாநகராட்சி நிர்வாகம் வட்டாசியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு பக்கம் விடியல் அரசு பட்டா வழங்கும் முகாம்களை நடத்துகிறது. இன்னொரு பக்கம் ஏற்கனவே வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய மாநகராட்சி உத்தரவு பிறப்பிக்கிறது. இது மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம் தவிர வேறல்ல” என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், வட்டாசியருக்கு பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக ரத்து செய்யாவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் மீனவர்கள் விடியல் அரசுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.