தூத்துக்குடி, செப்டம்பர் 17 சுயமரியாதை இயக்கத்தின் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு, தூத்துக்குடி விடுதலை சிறுத்தை கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம. கணேசன் தலைமையேற்றார். அவருடன் மத்திய மாவட்ட துணை செயலாளர் மா. மாரிமுத்து, மாவட்ட செய்தித் தொடர்பாளர் ரா. செல்வகுமார், வழக்கறிஞர் அணி செந். அர்ஜுன், க. முருகேஸ்வரி, மகளிர் அணி மாவட்ட பொறுப்பாளர் ராணி சத்தியராஜ், மகளிர் அணி முத்துக்குமார், மாவட்ட ஊடக மைய பொறுப்பாளர் ஜீவகனி, 59 வது வார்டு முகாம் செயலாளர் குட்டி சிறுத்தை, 58 வது வார்டு பொறுப்பாளர் செரிப்ஃ மேட்டுப்பட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தூத்துக்குடி மத்திய மாவட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.