சென்னை, செப்டம்பர் 17, 2025 – வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் வரும் (21.09.2025) (ஞாயிற்றுக்கிழமை) அன்று பார்வதி சுயம்வர வேள்வி சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் சங்கத்தின் மூத்தோர், ஆலோசகர்கள், நன்கொடையாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு நிர்வாகம் மற்றும் விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பெண்கள் திருவிளக்குப் பூஜைக்கும், மூத்தோர்கள் கணபதி ஹோமம் அமர்விற்கும் ஏதுவாக, காலை 8 மணிக்கே சங்கக் கட்டத்தில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வருகை தரும் அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைவரையும் அன்புடன் வரவேற்கப்படுவதாக நிர்வாகம், விழாக்குழுவினர் மற்றும் உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.