ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் குலசேகரநல்லூரில் பசுவந்தனை – ஓசனூத்து – S. கைலாசபுரம் சாலை (கி.மீ 10/0–13/0, 16/0–17/0) ஒருவழித் தடத்திலிருந்து இடைவழித் தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் பெட்டி பாலம் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.

இந்த வளர்ச்சி பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கொடியசைத்து துவக்கினார்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார்
உதவி பொறியாளர் திலிப் ஒன்றிய துணை செயலாளர் லெட்சுமணன்
ஆதிதிராவிடர் நலக் குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கிளைச் செயலாளர்கள் சண்முகம், வேல்சாமி, சண்முகநாதன் உடன் உள்ளூர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.